அருணாச்சல பிரதேச முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு

வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-02-09 06:36 GMT
வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ஹொலங்கியில் பசுமை விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பேசிய மோடி, சவுபாக்கியா திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் மின்வசதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதற்காக அருணாச்சல பிரதேச முதல்வரை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். இங்கிருந்து புறப்படும் பிரதமர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட திட்டங்களை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்