குப்பத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை : கிராம வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டல வருவாய் அலுவலர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பவ்யா.

Update: 2019-01-20 05:14 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டல வருவாய் அலுவலர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பவ்யா. இவருக்கு கிராம வருவாய் அலுவலராக உள்ள ஆனந்த் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. செல்போனில் புகைப்படத்தை மார்பிங் செய்து, அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குழுவில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பவ்யா அளித்த புகாரில் ஆனந்த மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்