பெண்களிடம் நகை, பணம் மோசடி

ஆந்திர மாநிலத்தில் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகி அவர்களிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-19 13:04 GMT
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்துக்கூரை சேர்ந்தவர் வாசு. இவர் மீது பாலாஜி நகரை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் வாசு சமூக வலைத்தளம் மூலம் தன்னிடம் நட்பாக பழகி தன்னிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வாசுவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 6 வருடங்களாக சமூக வலைத்தளம் மூலம் பெண்களிடம் நட்பாக பழகி, அவர்களை காதலித்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதுபோல் ஏராளமான பெண்கள் வாசுவின் வலையில் சிக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்