சபரிமலை வருமானத்தை அரசு எடுக்கிறதா? - தேவசம் போர்டு தலைவர் விளக்கம்

சபரிமலை வருமானத்தை கேரள அரசு எடுத்துச் செல்வதாக பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-17 08:20 GMT
சபரிமலையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், 3 வங்கிகளில் உள்ள கணக்குகளைத் தவிர சபரிமலையின் வருமானம், வேறெங்காவது செல்கிறது என்பதை நிரூபிக்க தயாரா என்று சவால் விடுத்தார். சபரிமலைக்கு, கேரள அரசு கடந்தாண்டு 200 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளதாகவும், தற்போதைய கேரள அரசால் சபரிமலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் பத்மகுமார் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்