விளையாட்டின் போது மயங்கி விழுந்து இறந்த மாணவர் - மகாராஷ்டிராவில் சோக சம்பவம்

கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர், ஆட்டத்தின் போதே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-12-16 03:07 GMT
கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர், ஆட்டத்தின் போதே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்று வந்த மாணவர் ஜிபின் சன்னி. கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. இதில் கலந்துகொண்ட அந்த மாணவர், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்று உடல் பலம் முழுவதையும் பயன்படுத்தி தீவிர முனைப்பு காட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த மாணவர், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்