போக்குவரத்து விதிகளை மீறி சென்ற கார் : சிசிடிவியில் பதிவாகிய காட்சிகள்

மகாராஷ்டிர மாநிலம் தானேவை அடுத்துள்ள நவுபடா என்னும் பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறி சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Update: 2018-12-10 10:30 GMT
மகாராஷ்டிர மாநிலம் தானேவை அடுத்துள்ள நவுபடா என்னும் பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறி சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர், தான் அரசு  வழக்கறிஞரின் மகன் என்று கூறி காரை மீண்டும் இயக்க முயற்சித்தார். காரை போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினர். போலீசார் மீது ஏற்ற வருவது போல காரை இயக்கிய அந்த நபர், நிற்காமல் வேகமாக சென்றார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்