கற்பக விருட்ச வாகனத்தில் தாயார் வீதி உலா

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளான இன்று, பத்மாவதி தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2018-12-07 07:16 GMT
திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளான இன்று, பத்மாவதி தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊர்வலத்தில் குதிரை , யானை, காளைகள் அணிவகுத்து சென்றன. பக்தர்கள் பஜனை பாடியபடியும் கோலாட்டம் ஆடியபடியும் சென்றனர். சில பக்தர்கள் சுவாமி அவதாரங்களை குறிக்கும் வேடமணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்