மூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பு : போலீசார் விசாரணை

மும்பையில், பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-13 04:08 GMT
மும்பையில், பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சயான் ஜெயின் சொசைட்டி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வரும் இச்சான் பேன் என்ற மூதாட்டி, வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த நபர், மூதாட்டி அணிந்திருந்த 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயினை பறித்துகொண்டு தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்