ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த பயணி

டெல்லியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, ஆட்டோவில் ஏறிய பயணி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-08 05:50 GMT
டெல்லியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, ஆட்டோவில் ஏறிய பயணி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, டெல்லியின் கன்னட் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில், பயணிக்கும், ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பயணி, ஓட்டுனரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஓட்டுனரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்