230 கிலோ கஞ்சா பறிமுதல் - இலங்கைக்கு கடத்த முயன்றபோது சிக்கியது

தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் சூளூர்பேட்டை சுங்கச் சாவடியில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-23 07:48 GMT
தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் சூளூர்பேட்டை சுங்கச் சாவடியில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 230 கிலோ கஞ்சா மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். கஞ்சாவை ஆந்திராவில் இருந்து நாகை வழியாக கடத்தி கடல்வழியாக இலங்கைக்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்