வீடு புகுந்து போலீசார் கடத்தல் - தீவிரவாதிகள் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று போலீசாரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-21 09:57 GMT
சோபியான் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்த மூன்று  போலீஸ் அதிகாரிகளை நேற்று இரவு வீடு புகுந்து தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். பதவியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தியும் போலீஸ் அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இன்று காலை ஊர் எல்லையில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவர்களது உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட 3 போலீசாரின் உடல்களும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்