"அச்ச நிலையை உருவாக்குகிறது காங்" - காங். மீது ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

நாட்டில் அச்சம் மிகுந்த நிலையை, காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-09-10 16:36 GMT
நாட்டில் அச்சம் மிகுந்த நிலையை, காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டி உள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வு விவகாரத்தில் பாஜக  அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்