கர்நாடகாவில் அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதம்

கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் குடையுடன் பாடம் படிக்கும் மாணவர்கள்

Update: 2018-07-18 12:42 GMT
கர்நாடகாவின், ஹாசன் மாவட்டத்தில் உள்ள மல்லிபட்னா பகுதியில் அரசுப்பள்ளி கட்டப்பட்டு, சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகுகிறது. இந்நிலையில், கடந்த 20 நாட்களாக ஹாசன் மாவட்டத்தில் கனமழை பெய்தது. தற்போது மழை நின்றுவிட்ட நிலையிலும், கட்டிடத்தின் மேல் தேங்கியிருந்த நீர் ஒழுகியதால், மாணவர்கள் வகுப்பறையில் குடைபிடித்தபடி பாடம் படிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்