குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-07-04 02:37 GMT
குடும்பத் தகராறு காரணமாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கிருஷ்ணா லங்கா கிராமத்தை சேர்ந்த குருவாரெட்டிக்கும் அவரது மனைவி காயத்ரிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் காயத்ரி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் குருவாரெட்டியிடம் போலீசார் கடுமையாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குருவாரெட்டி தன் மரணத்திற்கு மனைவி, மாமனார் மற்றும் மைத்துனர்களே காரணம் என வாக்குமூலம் அளித்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்