ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்ட வழக்கில் திரைப்பட இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்தில் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கவுதமனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.