கலையுலகத்திலும், மக்களிடமும் தாம் தான் நாட்டாமை - டிவிட்டரில் சரத்குமார் கருத்து

கலையுலகத்திலும் , மக்களிடமும் தன்னை நாட்டாமையாக அடையாளப்படுத்திய படம் நாட்டாமை என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் தெரிவித்தார்.

Update: 2019-11-02 18:46 GMT
கலையுலகத்திலும் , மக்களிடமும் தன்னை நாட்டாமையாக அடையாளப்படுத்திய படம் நாட்டாமை என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டாமை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, படம் குறித்து பலரிடமிருந்தும் பாராட்டுகள் தமக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும் தாம் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்