பிரமாண்ட இந்திப் படம் இயக்குகிறாரா பா. ரஞ்சித்?

இயக்குனர் பா.ரஞ்சித், ஒரு பிரம்மாண்ட இந்திப் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-08-03 07:07 GMT
இயக்குனர் பா. ரஞ்சித், ஒரு பிரம்மாண்ட இந்திப் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாலிவுட்டைச் சேர்ந்த 'நமா பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படம், ஓர் உண்மைக் கதையை தழுவி, வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இயக்குனர் பா ரஞ்சித்துடன் கூட்டணி சேர்ந்தது மகிழ்ச்சி அளிப்பதாக நமா பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்