குழந்தைக்கு மூச்சு திணறல் - கதறி அழுத தாய் : துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணாத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்து உள்ளது.
STERLING HEIGHTS பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஒரு வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த போது குழந்தை ஒன்று மூச்சு விட முடியாமல் திணறுவதை கண்டனர். உடனடியாக தாயிடம் இருந்து குழந்தையை பெற்று கொண்ட காவலர் கேமரூன் தன்னால் முடிந்த முதலுதவியை குழந்தைக்கு அளித்தார். அப்போதும் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பிறகு காவலர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதனை கண்டு குழந்தையின் தாய் தெருவிலேயே கதறி அழுதார், தற்போது அந்த குழந்தை பூரண குணமடைந்து நலமாக உள்ளது.
Next Story