தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
சென்னை : 

சென்னையில் திருவான்மியூர், அடையார், பெசன்ட் நகர், அண்ணா சாலை , மெரினா, வேளச்சேரி, தரமணி,ஆலந்தூர் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

பொன்னேரி : 

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, செங்குன்றம், பெரியபாளையம், மீஞ்சூர், சுற்றுப்பகுதிகளில் இரவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 

பூந்தமல்லி : 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், போரூர், ஐயப்பன்தாங்கல், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாமல்லபுரம் : 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பெய்த மழையால் கடற்கரை சாலை  ஐந்துரதம் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.  


திருச்செங்கோடு : 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  பெய்த மிதமான மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி : 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக அவ்வப்போது இரவிலும் பகலிலும் கனமழையும் மிதமான மழையும்  பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

நாகை : 

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரமாக பெய்த கனமழையால் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார், அம்பகரத்தூர், திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

திருவாரூர் : 

திருவாரூர் மாவட்டத்தில் விளமல், வாழ வாய்க்கால்,   நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. குறுவை சாகுபடிக்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அயடைந்தனர். 

கும்பகோணம் : 

கும்பகோணத்தில் தாராசுரம், கொரநாட்டுகருப்பூர்,  சாக்கோட்டை, அம்மாசத்திரம்  உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. 

கொடைக்கானல் : 

கொடைக்கானல்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால் நீர் ஆதாரங்கள் வெகுவாக உயர்ந்து வருகின்றன. 

வாணியம்பாடி : 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றியுள்ள செட்டியப்பனூர், ஆலங்காயம் நிம்மியம்பட்டு, ஜனதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்