சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை - தண்ணீர் டிரம்மில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமியை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடலிவிளையை சேர்ந்த 7 வயது சிறுமி மிட்டாய் வாங்கி வருவதற்காக சென்றுள்ளார். தன் தாயிடம் 10 ரூபாய் பணத்தை வாங்கிச்சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடினர். இதனிடையே வடலிவிளையில் உள்ள கால்வாய் அருகே உள்ள தண்ணீர் டிரம்மில் சிறுமியின் சடலம் கிடந்தது. இதைப்பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். சிறுமியின் சடலத்தை பார்த்த அவரது  பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி பார்ப்போரை பதற வைத்தது. சிறுமியை கொலை செய்ததாக அதே ஊரை சேர்ந்த முத்தீஸ்வரன் மற்றும் நித்தீஸ்வரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்