கூட்டுறவு வங்கி கடன் விவகாரம் - முதலமைச்சர் விளக்கம்
கொரோனா குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்கள் வாழ்தாரத்தை காப்பாற்ற இலவச அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுவதாக அவர் கூறினார். விவசாயிகளுக்கு 3 தவணையாக 2000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் அனைத்து கடன்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Next Story