"ஊர்காவல் படையில் பணியாற்ற விருப்பம்" - 75 வயது முதியவரரின் உற்சாகம்
திருப்பூரில், ஊர் காவல் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து 75 வயது முதியவர் முன்வந்த சம்பவம் காவலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூரில், ஊர் காவல் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து 75 வயது முதியவர் முன்வந்த சம்பவம் காவலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. பெரியார் காலனி பகுதியை சேர்ந்த ஜெயபால், ஊர்காவல் படையில் பணியாற்றி 1993 ஓய்வு பெற்று, வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, ஊர்காவல்படை அலுவலகத்திற்கு சீருடையில் வந்துள்ளார். முதியவரை பாராட்டிய திருப்பூர் காவல் துறையினர், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வந்தனர்.
Next Story