தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

குடிநீர் கேட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
x
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 2 ஆண்டுகளாகவே குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை குருடம்பாளையத்தில் 25 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சமதானப்படுத்த வந்த அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்