வேள் பாரி புத்தக வெளியீட்டு விழா : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கேடசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை-ராஜா அண்ணாமலைபுரத்தில் மாலையில் நடைபெற்றது.
வேள் பாரி  புத்தக வெளியீட்டு விழா : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
x
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கேடசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை-ராஜா அண்ணாமலைபுரத்தில் மாலையில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த நூலை வெளியிட்டார். விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின்,  2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய  தமிழ் சமுதாய மக்களின் பழக்க வழக்கம் - பண்டைக்கால  அறிவியல் - உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகள், இந்நூலில் இடம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் பழமையை மீட்டெடுப்பதில்,  திராவிட கழகம் தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்த மு.க. ஸ்டாலின், நூலாசிரியரின் சிறப்பான பணிக்கு, வாழ்த்து கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்