கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்துக்கும் தமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று தெரிவித்தார்.  தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் மீதும், மிகுந்த அன்பும், நம்பிக்கையும் பிரதமர் மோடி வைத்திருப்பதாக கூறினார். தமிழகத்தின் குரல் டெல்லியில் அதிகமாக ஒலிக்க வேண்டும் என மோடி விரும்புவதாகவும்,  பா.ஜ.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்