

அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மின்சார வாகனம் கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் மின்சார வாகன இயக்கம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், அமைச்சரகத்தில் உள்ள அனைத்து அரசாங்க வாகனங்களும், மின்சார வாகனமாக மாற்ற உள்ளதாக அறிவித்தார். டெல்லியில் மட்டும் 10,000 வாகனங்கள் மின்சாரத்தில் இயக்கினால், காற்று மாசு குறைவதோடு, மாதத்திற்கு 30 கோடி ரூபாய் செலவை குறைக்கலாம் என தெரிவித்தார்.