நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்..! அடுத்த‌டுத்து வந்த போன் கால்களால் பரபரப்பு...

x

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கொலை செய்யப் போவதாக, அவரது அலுவலகத்திற்கு இரண்டு முறை மிரட்டல் கால் வந்த‌தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு காலை 11:30 மணிக்கும் 11:40 மணிக்கும் அடுத்த‌டுத்து இரண்டு முறை மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பாதுகாப்பை அதிகப்படுத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்