முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்
மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் முக கவசம் அணியாமல் ஒருவர் மங்களூருவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்றுள்ளார். ஆனால் முக கவசம் அணிந்து வந்தால் தான் பொருட்களை வழங்க முடியும் என கடை ஊழியர் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரச்சினை முற்றவே கடை ஊழியர் மீது வாடிக்கையாளர் தாக்குதல் நடத்தினார். வாடிக்கையாளரின் இந்த செயலை சக ஊழியர்கள் தங்கள் செல்போனில் படம்பிடித்ததுடன் போலீசிலும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story