கற்பக விருட்ச வாகனத்தில் தாயார் வீதி உலா
திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளான இன்று, பத்மாவதி தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளான இன்று, பத்மாவதி தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊர்வலத்தில் குதிரை , யானை, காளைகள் அணிவகுத்து சென்றன. பக்தர்கள் பஜனை பாடியபடியும் கோலாட்டம் ஆடியபடியும் சென்றனர். சில பக்தர்கள் சுவாமி அவதாரங்களை குறிக்கும் வேடமணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Next Story