கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை....

Update: 2023-01-28 12:16 GMT

கோவில்பட்டி அருகே உள்ள முப்புளியான் கோயில் வளாகத்தில், ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு நடத்திய விசாரணையில், நபர் குதிரை குத்திப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகன் உயிரிழந்ததில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிண்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்