கடனை கட்ட தவறிய பெண்ணை சாதியை சொல்லி திட்டிய பைனான்ஸ் நிறுவனம்

Update: 2023-01-03 09:35 GMT

அருப்புக்கோட்டை அருகே கடனை செலுத்த தவறிய பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டிஸ்வரி. இவர் விருதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து 35 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடனை முறையாக கட்டவில்லை என கூறி, நிதி நிறுவன ஊழியர்கள் பாண்டிஸ்வரியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு, சாதி பெயரை கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாண்டிஸ்வரியின் வீட்டை ஊழியர்கள் பூட்டி சென்ற நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்