"டி20 உலகக்கோப்பைக்கு பின் ரோகித், கோலி அணியில் வேண்டாம்.." - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-04-27 09:59 GMT

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலியை அணியில் சேர்க்கக்கூடாது என குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், விராட் கோலி - ரோகித் சர்மா உள்ளிட்டோர் அவர்களாகவே விரும்பும்போது ஓய்வு பற்றி முடிவெடுக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்தார். எனினும் உலகக்கோப்பைக்கு பின் இந்திய டி20 அணியில் இளம் வீரர்களை மட்டுமே தான் பார்க்க விரும்புவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்