"பாஜக பூத் ஏஜெண்டுகள் பணத்தில் ரூ.40 லட்சம் மோசடி..." பரபரப்பை கிளப்பிய பாஜக போஸ்டர்

Update: 2024-04-27 09:58 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பாஜகவினர் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள், அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமங்கலத்தில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களில், பாஜக பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் 40 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நால்வர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பாஜகவினரே புகார் கூறியது போன்றும் இருந்தது. சர்ச்சையை ஏற்படுத்திய அந்த போஸ்டர்கள் சில மணி நேரங்களிலேயே கிழிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றும், பாஜக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்ப திட்டம் என்றும், அந்த போஸ்டருக்கும் பாஜகவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்