வாழைத்தோப்பில் பதுங்கி வீட்டிற்குள் நுழையும் குல்லா கொள்ளையர்கள் - அச்சத்தில் உறைந்த மக்கள்

Update: 2024-04-27 10:01 GMT

கரூர் மாவட்டம் குளித்தலையில், குல்லா கொள்ளையர்களின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்திருப்பதாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.. குளித்தலை பெரியார் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில்... குல்லா அணிந்து கொண்டு மர்மநபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மீண்டும் பாலாஜி நகருக்குள் குல்லா கொள்ளையர்கள் நுழைந்ததாகவும், வாழைத்தோப்பு வழியாக பதுங்கி வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் ஏதும் இல்லாததால் திரும்பிச் சென்றதாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் புகாரால் குளித்தலை பொதுமக்கள் அச்சமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்