"அரசுத் துறைகளில் இருக்கும் காலியிடங்கள்"... டிஎன்பிஎஸ்சி சொன்ன முக்கிய தகவல்

Update: 2022-12-24 03:20 GMT

ஊடகங்களில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லாததால், தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் நிலையில், அவற்றை மறுத்து, பின்வரும் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணியிடங்களுக்கான தெரிவு முகமைகளின் மூலம் நடத்தப்படும் சில போட்டித் தேர்வுகளின் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுவதால், அவற்றை நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு வழக்குகள் தொடரப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ள உரிய விதிகளும் இந்த அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய விதித் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்