கை, கால்களை கட்டி.. கோழிக்கடை ஊழியர் கழுத்தறுத்து கொடூர கொலை - திருச்சியில் பயங்கரம்

Update: 2022-12-31 07:10 GMT

திருவெறும்பூர் அருகே கடன் வாங்கிய நபர், பணத்தை திருப்பி தராததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தைச் சேர்ந்த சுந்தர். கோழிக் கடையில் பணியாற்றி வந்த இவர், வடை கடை நடத்தி வந்த ராமன் என்பவரிடம் 4 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதனை திருப்பி தராததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராமன் தான் நடத்தி வந்த வடை கடையில் இரவு நேரத்தில் வியாபாரம் செய்து கடனை அடைக்க வலியுறுத்தியுள்ளார். எனினும், சுந்தர் கடனை திருப்பி தராததால், ராமன் அவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து பின்னர் போதையில், கை கால்களை கட்டி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் இது தொடர்பாக ராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்