கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு.. அமலாக்கத்துறைக்கு எதிராக மனு தாக்கல்

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு.. அமலாக்கத்துறைக்கு எதிராக மனு தாக்கல்

Update: 2022-07-24 07:56 GMT

கேரளாவின் தங்கம் கடத்தல் வழக்கை பெருங்களூருக்கு மாற்ற வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் உள்ள தங்கம் கடத்தல் வழக்கை, பெங்களூருக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அதில், சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தி, விசாரணையை சீர்குலைக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் செயலாளர் சிவசங்கர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்