மாயாஜாலுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்ட விவகாரம்..பட்டாவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2022-09-01 15:13 GMT

சென்னை ஈ.சி.ஆரில் 2 ஏக்கர் நிலத்தை மாயாஜால் நிறுவனம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகிறது. இந்த நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள நிலையில், இதை மறைத்து, பட்டா கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதன் மீது காஞ்சிபுரம் தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாயாஜால் வழக்கு தொடர்ந்த‌தால், பட்டா வழங்க தனி நீதிபதி கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து, காஞ்சிபுரம் தாசில்தார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் டி.ராஜா மற்றும் குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்த‌து. அப்போது, குறிப்பிட்ட நிலம் தொடர்பான பல உண்மைத் தகவல்களை தனி நீதிபதி முன்பு மறைத்து பட்டா பெற்றுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்