"தமிழகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியற்று வாழ்கிறார்கள்" - வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்

Update: 2023-01-26 05:14 GMT

தமிழகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியற்று வாழ்கிறார்கள் என்றும், தேர்தல்கூட்டணி காரணமாக பல இடங்களில் நான் வாயடைத்து நிற்கிறேன் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலை ஆவண நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பழ.நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ஈழப்படுகொலை நடந்து இத்தனை ஆண்டுகள் முடிந்தும் அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்