கலிஃபோர்னியாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு....| america

Update: 2023-01-22 16:39 GMT

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தேறியுள்ளது. சீன புத்தாண்டு என அழைக்கப்படும், சந்திர புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ஆயிரக்கணக்கான மக்கள், மான்டேரி பார்க் பகுதியில் கூடியிருந்தனர். இதனிடையே, மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பயங்கரவாத சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை, காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்