சுதந்திர தின விழாவில் பரபரப்பு.. கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் கதறிய இளம்பெண்

Update: 2022-08-15 12:57 GMT

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் ஒருவர், விதவை பணம் வழங்குவதில்லை என ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் வாகனத்தில் சென்று மரியாதையை ஏற்றபோது கூட்டத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்த சாலினி என்ற இளம்பெண், ஆட்சியரை தடுத்து நிறுத்தினார். கணவர் இறந்து விட்டதாகவும், விதவை உதவித்தொகை, வாரிசு சான்று கிடைக்காததால் குழந்தையை வளர்க்க முடியாமல் வறுமையில் வாடுவதாகவும் முறையிட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற ஆட்சியர், இளம்பெண்ணிற்கான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்