தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் வீட்டுக்குள் நைசாக உள்ளே நுழைந்த நபர் - அடுத்து நடந்த அதிர்ச்சி

Update: 2022-12-11 10:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, வீட்டில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கறம்பக்குடி அருகே புதுப்பட்டியை சேர்ந்த ராஜலெட்சுமி என்பவர், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, ராஜலட்சுமி கூச்சலிடவே, அங்கிருந்து தப்பிய அந்த நபர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் கைதான நபர் மாதவன் என தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்