கொட்டும் மழையில் போலீஸ் முன்னிலையில் எல்லை மீறிய ஆபாசம் - கோயில் திருவிழாவில் அதிர்ச்சி

Update: 2022-09-18 11:06 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சியில், ஆபாச நடனம் இடம் பெற்றது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.

பொன்னமராவதி அருகே உள்ள மேலசிவபுரி கிராமத்தில், விநாயகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெண்கள், சிறுவர்களும் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில், நடன கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடினர். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மழை குறுக்கிட்ட போதும், மழையை பொருட்படுத்தாமல் ஆபாச நடனம் தொடர்ந்து..

காவல்துறையினர் முன்னிலையிலேயே ஆபாச நடனம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்