பிரிந்து செல்ல முடிவெடுத்த 3வது மனைவி... கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன் - கேரளாவில் பயங்கரம்

Update: 2023-01-29 08:39 GMT

கேரளா மாநிலம் எர்ணாகுளம் காலடியை சேர்ந்த மகேஷ்குமார், தென்காசியை சேர்ந்த ரத்னவள்ளி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், ஓணம் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற ரத்னவள்ளி, முத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதால் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என மகேஷ்குமாரிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறைக்கு தென்காசி சென்ற மகேஷ்குமார் ரத்னவள்ளியை காலடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போதும் தான் முத்துவுடன் செல்லவுள்ளதாக ரத்னவள்ளி கூறியதால் ஆத்திரம் அடைந்த மகேஷ்குமார் அவருடைய முகத்தை போர்வையால் அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் ரத்னவள்ளியை காணவில்லை என புகார் அளித்த மகேஷ்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளியானது. இதனை தொடர்ந்து மகேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்