கஞ்சா போதையில் வாக்குவாதம்.. விருந்துக்கு வந்த நண்பனுக்கு கத்தி குத்து - கதறும் பெற்றோர்கள்

Update: 2022-12-12 15:15 GMT

திருப்பத்தூரில், கஞ்சா போதையில் ஏற்பட்ட வாய்த் தகராறில், நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் கௌதம்பேட்டை பகுதியை சேர்ந்த முகேஸ்வரன் என்பவருக்கு திருமணமாகி, 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதே பகுதியை சேர்ந்த விஜய் பிரசாந்த் என்பவர், குழந்தை பிறந்ததற்காக முகேஸ்வரனிடம் விருந்து கேட்டுள்ளார்.

பின்னர் இருவரும், கவுதம் பேட்டை பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு, விருந்தை தொடங்கியுள்ளனர்.

பின்னர் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த முகேஸ்வரன், மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜய்பிராந்த்தை குத்தியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தலைமறைவாக இருந்த முகேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்