பலூன் கடை நடத்துவதில் போட்டி... கத்தியுடன் ரகளை செய்த வியாபாரி - நரிக்குறவர் பெண்களுக்கு மிரட்டல் - புதுச்சேரியில் அதிர்ச்சி

Update: 2023-04-18 12:25 GMT

புதுச்சேரி கடற்கரை சாலையில், இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டும் வீடியோ சமூக வளைதளங்களில் பரவியது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த நபர் வைத்திக்குப்பத்தை சேர்ந்த தர்மா என தெரியவந்தது.

கடற்கரை காந்தி திடல் நடைபாதையில், தர்மாவின் பலூன் கடைக்கு அருகே, நரிக்குறவர் பெண்கள் சிலர் கடை வைத்துள்ளனர்.

அந்த கடையை எடுக்கச் சொல்லி, மதுபோதையில் வந்த தர்மா, கத்தியுடன் அவர்களை மிரட்டியது தெரியவந்தது.

தலைமறைவான தர்மாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்