"ஆனாலும் இவ்ளோ கோவம் ஆகாது" ராஜினாமா செய்த 5 கவுன்சிலர்கள் - அதிர்ச்சியில் உறைந்த ஊராட்சி தலைவர்

Update: 2023-01-27 03:21 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து 5 வார்டு உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


அரசு பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆரணிபடவேடு சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தை சுகந்தி, ஏழுமலை, குணாநிதி, கீதா, பரிமளா ஆகிய ஐந்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்துள்ளனர்.

ஐந்து வார்டு உறுப்பினர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி துரையிடம் வழங்கினர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை எந்த சமரசம் ஏற்க முடியாது என வார்டு உறுப்பினர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்