அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் சாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

Update: 2023-01-23 04:07 GMT

அரக்கோணம் அருகே திருவிழாவில் கிரேன் சாய்ந்து விழுந்த‌தில், பள்ளி மாணவன் உட்பட 4 பேர் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் தைப் பொங்கலை யொட்டி, பணவட்டம்மன் கோயிலில் மயில் ஏரி திருவிழா நடைபெற்றது.


விழாவில், அலகு குத்தி, கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர்.


அப்போது, கிரேன் திடீரென கூட்டத்தில் இருந்தவர்கள் மீது சாய்ந்த‌து. இதில், அலகு குத்தியிருந்த பள்ளி மாணவன் ஜோதி பாபு என்பவர் தூக்கி வீசப்பட்டார்.


அவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


அத நேரத்தில், கூட்டத்தில் படுகாயமடைந்த 4 பேர், அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.


திருவிழாவில் கிரேன் விழுந்து 4 பேர் உயிரிழந்த‌து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்