அம்பேத்கர் பிறந்த நாள் விழா.. "2047-க்குள், இந்தியா வளர்ச்சியடைய வேண்டும்" - ஆளுநர் பேச்சு

Update: 2023-04-14 14:28 GMT
  • சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டனர்.
  • இதில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசிய மாணவிகளுக்கு ஆளுநர் ரவி சால்வை அணிவித்து, அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
  • மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது என கூறியுள்ளார்.
  • இந்த உலகம் ஒரே குடும்பமான வாசுதேவ குடும்பமாக மாற வேண்டும் என்றும், அதற்கு அனைத்து விதத்திலும், இந்தியா வளர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்