"மாமனார் பாலியல் தொந்தரவு தருகிறார்" போராட்டத்தில் குதித்த மாற்றுத் திறனாளி பெண்

Update: 2022-08-09 01:54 GMT

மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக கூறி மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயதான மாற்றுத் திறனாளி பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

தனக்கு 2020ல் திருமணம் நடந்ததாகவும், கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் தன்னுடைய மாமனார் மனோகரன் தன்னிடம் அத்துமீறி வருவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்